• Latest News

    November 15, 2014

    கிட்னியை/சிறு நீரகத்தை பாதுகாப்பது எப்படி?

    உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகமாகி வருகிறது என்பது உண்மைதான். ஆனாலும் சிறுநீரகத்தை பற்றிய விவரங்களும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து வைத்திருப்பதாக தெரியவில்லை. உலகத்தில் 10 விழுக்காடு பேர் சிறுநீரகப் பிணிகளால் அவதிப்படுகின்றனர்.
    1) சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு ஒரே அருமருந்து, தண்ணீர் தான்.தாகம் எடுத்தால்(மட்டுமே)உடனே தண்ணீரை பருக வேண்டும்.
    2) பேக்கரி பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.(ஈஸ்ட் கலந்த)
    3) கல்லில் சுட்ட பதார்த்தங்களை [தோசை, ஆம்லைட்] தவிர்க்க வேண்டும்.(வேண்டுமென்றால் மாதம் இரு முறை சாப்பிடலாம்.)
    4) அதிகம் கோதுமை உணவு மற்றும் நிலக்கடலை உண்பது தவறு (இரண்டிலும் உப்பு சத்து அதிகம் உள்ளதால் சீறு நீரகத்திற்கு கேடு விளைவிக்கும்.)
    5) எண்ணையில் பொறித்த உணவு, உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.
    6) பால் கன்று குட்டி குடிக்கதனேஒழிய மனிதன் குடிக்க இல்லை.இதை நாம் புரிந்து கொண்டு ஆக வேண்டும். பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி
    ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம்.
    7) புகைப்பிடித்தல், புகையிலை உபயோகித்தல் சிறுநீரகங்களை பாதிக்கும். தவிர்க்கவும்.
    8) வலிமாத்திரை சிறுநீரகங்களை பாதிக்கும் சிறிய வலிகளுக்குகூட மருந்து கடையில் வலிமாத்திரை சாப்பிடுவோருக்கு நாளடைவில் சிறுநீரகங்கள் செயலிழக்க வாய்ப்புண்டு.
    9) அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.
    10)அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
    11)அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.
    12)முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்
    13)குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.
    14)குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.
    15)குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.
    16)சிறுநீரை அடக்கிக் கொள் வதைத் தவிர்க்க வேண்டும்
    17)பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
    இப்படிப்பட்ட 17 வகையான உணவு முறைகள் அதிக ரத்த அழுத்தம்(Hypertension), நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பைதவிர்கிறது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
    மறை மருந்து
    ——————-
    நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையைவிட குறைவாக சுரக்கும். இதனால் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்யவேண்டியுள்ளது. இதனால்தான் அவை கூடிய சீக்கிரமே செயலிழக்கிறது.
    1) சிறுநீரக நோயாளிகளுக்கு தண்ணீருக்கு அடுத்தபடியாக உயரிய மருந்து-உண்ணா நோன்பு.வாரத்தில் ஒருநாள் அலுவலகங்கள்,தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடுவதுபோல் நமது வயிறு, குடல், கழிவு மண்டலங்களுக்கு நல்ல ஓய்வு தேவை. உண்ணாவிரதம் இருப்பதால், நம் உடம்பிலுள்ள ஒட்டுமொத்த ரத்தமும், கழிவு மண்டல சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
    இதனால் சிறுநீரகக் கழிவுகள் விரைவில் வெளியேற வாய்ப்பு கிட்டுகிறது.
    2) உண்ணாவிரதத்துடன் சூரிய சக்தி குளியலும் எடுத்தால், உடம்பின் திரவக் கழிவுகள் வியர்வையாக வெளியேறிவிடும். இதனால் சிறுநீரகங்களுக்கு
    போதுமான ஓய்வு கிட்டும். வேலைப் பளுவும் குறைகிறது.
    3) உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி வலிக்கும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவதும் மதியம் முள்ளங்கி சேர்த்து கொள்ளுவதும் நல்ல பலனளிக்கும்.
    4) வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை ‌சில எ‌ளிய வை‌த்‌திய முறைக‌ள் உ‌ள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிட்னியை/சிறு நீரகத்தை பாதுகாப்பது எப்படி? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top