• Latest News

    November 24, 2014

    மோடியின் குரலுக்கு ஆடிய ஜனாதிபதி:விஜித ஹெரத்

    இந்திய மீனவர்களின் மரண தண்டனை சம்பந்தமாக பிரதமர் மோடியின் ஒரு தொலைபேசி அழைப்பால் ஆடிப்போய் விடுதலை செய்த ஜனாதிபதியால் ஏன் இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் கேள்வி எழுப்பினார் .

    கடந்த வெள்ளிக்கிழமை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

    கடந்த 25 வருடங்களுக்கு மேல் எந்தவித குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யாது வீணாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்யமுடியாது.

    அத்தோடு சிறு,சிறு குற்றங்களுக்காவும் பல வருடங்கள் சிறையில் வாடும் இவ்வாறானவர்களை விடுதலை செய்யாமல் ஒரு நாளைக்கு ஒரு லொறி அரசி தேவைப்படுவதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் கூறுகின்றர்.

    இன்னும் சில நாட்களில் யாழ் சிறையில் உள்ளவர்கள் கூரை மீதேறி போராட்டம் நடாத்தும் நிலை உருவாகும். இன்று நீதித்துறை நீதி அமைச்சின் கீழ் இல்லை அதையும் நிறைவேற்று அதிகாரிமே ஆட்டுவிக்கின்றது என கூறினார்.
    TW -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மோடியின் குரலுக்கு ஆடிய ஜனாதிபதி:விஜித ஹெரத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top