• Latest News

    November 19, 2014

    அரசாங்கமும், எதிர்கட்சியும் மு.கா, த.தே.கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை வெளியிட வேண்டும்: பொது­ப­ல­சேனா

    இந்­நாட்டின் தலை­வர்கள் யாரென்­பதை சிறு­பான்­மை­யின அர­சியல் கட்­சிகள் தீர்­மா­னிக்கும் காலம் மலை­யேறி விட்­டது. 
    தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் நடத்­தப்பட்ட பேச்­சு­வார்த்­தை­களின் விப­ரங்­களையும் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கைகள் மற்றும் நிபந்­த­னைகள் என்­ன­வென்­பதையும் அரசு தரப்­பி­னரும் எதிர்க்­கட்­சி­யி­னரும் நாட்­டுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும் என பொது­ப­ல­சேனா கோரியுள்ளது.

    கொழும்பில் கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­ப­ல­சேனா அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இங்கு உரை­யாற்­றிய பொது­ப­ல­சே­னாவின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்;

    ஜனா­தி­பதித் தேர்­தலில் எப்­ப­டி­யா­வது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அரச தரப்பை சார்ந்த சிலரும் எதிர்க்­கட்­சியை சார்ந்­த­வர்­களும் நாட்டில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சர்­வ­தேச சதி­கா­ரர்­க­ளுக்கு துணை போகும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரு­டனும் முஸ்லிம் காங்­கி­ர­ஸு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளனர். சில நிபந்­த­னை­க­ளையும் ஏற்­றுக்­கொண்டு உடன்­ப­டிக்­கை­க­ளையும் செய்து கொண்­டுள்­ளனர்.
    எனவே நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள் என்ன? நிபந்­த­னைகள் என்ன? செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கைகள் என்­ன? ­ என்­பது தொடர்பில் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும். இந்­நாட்டின் தலை­வர்கள் யாரென்­பதை சிறு­பான்­மை­யின அர­சியல் கட்­சிகள் தீர்­மா­னிக்கும் காலம் மலை­யேறி விட்­டது. இனி ஒரு­போதும் அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம்.
    இந்­நாட்டின் தலை­வரை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக பொது­ப­ல­சேனா உரு­வாகி விட்­டது. சிங்­கள பெளத்­தர்­களே இந்­நாட்டை ஆள வேண்டும்.  அதனை நாமே தீர்­மா­னிப்போம். எனவே அரச தரப்­பி­னரும் எதிர்க்­கட்­சி­யி­னரும் நாட்டை காட்­டிக்­கொ­டுக்கும் சிங்­கள பௌத்­தர்­களை காட்­டிக்­கொ­டுக்கும் வர­லாற்றுத் தவறை செய்­வ­தற்கு முன்­வ­ரக்­கூ­டாது.
    இங்கு பொது வேட்­பாளர் என்ற பேச்­சுக்கே இட­மில்லை. தேசிய தலை­மைத்­து­வமே எமது இலக்­காகும். சிங்­கள பௌத்­தர்­களை யார் பாது­காக்­கின்­றார்­களோ அவர்­க­ளுக்கே எமது ஆத­ரவு.

    அவ்­வாறு இல்­லா­விட்டால் எமது கையில் தேசிய வேட்­பாளர் இருக்­கிறார். தக்க தரு­ணத்தில் கள­மி­றக்­குவோம்.

    அதற்­காக விசே­ட­மாக அர­சியல் குழு­வொன்றை நிய­மித்­துள்ளோம். எதிர்க்­கட்­சி­யான ஐ.தே.கட்­சிக்கு இன்று தலை­மைத்­துவம் இல்­லாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே தான் பொது வேட்­பா­ளரை தேடி ஓடு­கி­றது. இவ்­வாறு எதிர்க்­கட்­சியின் நிலை தொடர்ந்தால் விலாசம் இல்­லாமல் போய்­விடும்.

    சிங்­கள பௌத்­தர்­களின் உரி­மைகள் பாது­காப்பு பறி­போ­வதை எதிர்த்து கடந்த காலங்­களில் நாம் போரா­டினோம். ஹலால் பிரச்­சினை, வில்­பத்­துவில் காடுகள் அழிப்பு, காணிகள் பறி­முதல் ஷரிஆ வங்­கிகள் என பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு எதி­ராக குரல்­கொ­டுத்தோம்.

    ஆனால், இவை தொடர்பில் ஆளும் தரப்­பி­னரோ, எதிர்த்­த­ரப்­பி­னரோ எவரும் குரல் கொடுக்­க­வில்லை மௌனம் சாதித்­தனர்.

    இன்று ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட உள்ள நிலையில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்க வேண்டும். ஊழல் மோச­டி­களை ஒழிக்க வேண்டும். குடும்ப அர­சி­ய­லையே ஒழிக்க வேண்டும் என தேசிய பிரச்­சி­னை­களை உத­றித்­தள்ளி விட்டு அவற்­றிற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­காமல் வழ­மை­யான அர­சியல் விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கின்­றனர்.

    யுத்த காலத்தில் பிர­பா­க­ரனைப் பார்த்­துக்­ கொண்டு தேசிய பிரச்­சி­னை­களை மறந்தோம். ஆனால், இன்று பிர­பா­கரன் இல்லை. எனவே, தேசிய பிரச்சினைகளுக்கு முதலிடம் கொடுப்போம். சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை இங்கு உருவாக்குவோம் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கமும், எதிர்கட்சியும் மு.கா, த.தே.கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை வெளியிட வேண்டும்: பொது­ப­ல­சேனா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top