ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கோட்டை நகரசபை உறுப்பினர்கள் இருவர் எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தலைமையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தனுக விஷ்வஜித் மற்றும் ரஞ்ஜன் பொன்னம்பெரும ஆகியோரே இவ்வாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியில் இணைந்த எகலியகொட பிரதேச சபைத் தலைவர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரத்தில் இருக்கும் எகலியகொட பிரதேச சபையின் தலைவர் சரத் சந்தநாயக்க, இரண்டு உறுப்பினர்களுடன் பொது எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார்.
கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதான அலுவலகத்தில் அவர் இரண்டு உறுப்பினர்களுடன் இணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
பிரதேச சபை உறுப்பினர்களான சோதிராஜாகே கருணாதாச, ஈ.பி.சுனில் கருணாரத்ன ஆகியோரை இவ்வாறு அவருடன் எதிரணியில் இணைந்தனர்.
இதனால், எகலியகொட பிரதேச சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆகவும் எதிர்க்கட்சியின் எண்ணிக்கை 8 ஆகவும் சமானாகியுள்ளது.
பிரதேச சபையில் ஆளும் கட்சி 11 உறுப்பினர்களையும் எதிர்க்கட்சி 5 உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தலைமையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தனுக விஷ்வஜித் மற்றும் ரஞ்ஜன் பொன்னம்பெரும ஆகியோரே இவ்வாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியில் இணைந்த எகலியகொட பிரதேச சபைத் தலைவர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரத்தில் இருக்கும் எகலியகொட பிரதேச சபையின் தலைவர் சரத் சந்தநாயக்க, இரண்டு உறுப்பினர்களுடன் பொது எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார்.
கொழும்பு திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் உள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதான அலுவலகத்தில் அவர் இரண்டு உறுப்பினர்களுடன் இணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
பிரதேச சபை உறுப்பினர்களான சோதிராஜாகே கருணாதாச, ஈ.பி.சுனில் கருணாரத்ன ஆகியோரை இவ்வாறு அவருடன் எதிரணியில் இணைந்தனர்.
இதனால், எகலியகொட பிரதேச சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆகவும் எதிர்க்கட்சியின் எண்ணிக்கை 8 ஆகவும் சமானாகியுள்ளது.
பிரதேச சபையில் ஆளும் கட்சி 11 உறுப்பினர்களையும் எதிர்க்கட்சி 5 உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.

0 comments:
Post a Comment