• Latest News

    December 16, 2014

    கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

    தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் உள்ள கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த ஆண்டு ”தங்கமீன்கள்” படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காக நா.முத்துக்குமார் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம். 

    தற்போது அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. 

    இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவர், முனைவர் திரு.செல்வின்குமார் அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.

    ஏற்கனவே 2006 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து நா.முத்துக்குமார் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top