• Latest News

    December 01, 2014

    விரும்பிய அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவளிக்குமாறு, மக்களிடம் அகில இலங்கை ஜமயதுல் உலமா சபை கோரியுள்ளது.

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது விரும்பிய அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவளிக்குமாறு, மக்களிடம் அகில இலங்கை ஜமயதுல் உலமா சபை கோரியுள்ளது.

    எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ தனிப்பட்ட ரீதியில் ஆதரவளிக்கப்பட மாட்டாது என ஜமயதுல் உலமா சபையின் ஊடக செயலாளர் அல் செய்க் பாசில் பாருக் தெரிவித்துள்ளார்.

    எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிராக செயற்பட போவதுமில்லை.

    எமது அமைப்பின் பெயரில் அரசியல் கட்சிகள் கருத்து வெளியிடுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

    முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் அல்லாவிற்கு பய பக்தியுடன் செயற்பட வேண்டும்.

    குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்படக் கூடாது.

    மக்களின் நலன்களை முதனிலைப்படுத்தி செயற்பட வேண்டியது அவசியமானது என அல் செய்க் பாசில் பாருக் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விரும்பிய அரசியல் கட்சியொன்றுக்கு ஆதரவளிக்குமாறு, மக்களிடம் அகில இலங்கை ஜமயதுல் உலமா சபை கோரியுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top