• Latest News

    March 19, 2015

    மருதமுனை அல் - ஹம்றாவில் பாராட்டு விழா

    சஹாப்தீன்:
    மருதமுனை கமுஃஅல் - ஹம்றா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் விழா இம்மாதம் 22ஆம் திகதி ஞாயற்றுக் கிழமை பாடசாலையில் நடைபெற இருப்பதாக பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் ஏ.எஸ்.எம்.முர்சித் தெரிவித்தார்.
    பாடசாலையின் அதிபர் ஏ.குனுக்கத்துல்லா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பாராளுன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
    2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 120 மாணவர்களே கௌரவிக்கப்பட உள்ளார்கள். அத்தோடு, இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட இருப்பதாகவும் முர்சித் தெரிவித்தார்.
    இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் ஆகியோர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனை அல் - ஹம்றாவில் பாராட்டு விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top