• Latest News

    March 15, 2015

    சீகிரியவில் தொல்பொருட்களைச் சேதப்படுத்திய குற்றச் சாட்டில் கைதையுள்ள உதயசிறியை விடுதலை செய்யக் கோரி பிணைமனுத் தாக்கல்

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    சீகிரிய சுவரொன்றில் தனது பெயரை எழுதியமைக்காக இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுதற்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவரும் மேற்படி உதயசிறியின் விடுதலை தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
     
    இதன் தொடரில் நேற்று (13.03.2015) தம்புள்ளை நீதிமன்றத்தில் உதயசியை பிணையில் விடுவிக்கக் கோரி பிணைமனு ஒன்றினை சிரேஷ்ட சட்டத்தரணிகளுக்கூடாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தாக்கல் செய்துள்ளது.
     
    கடந்த 14.02.2015 அன்று சீகிரியவிற்கு சுற்றுலா சென்றிருந்த மட்டக்களப்பு, சித்தாண்டி, விநாயகர்புரத்தினைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (27) என்ற மேற்படி யுவதி அங்குள்ள சுவர் ஒன்றில் தனது பெயரை எழுதினர் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, 02.03.2015 அன்று தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவேளை தொல்பொருட்களைச் சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சீகிரியவில் தொல்பொருட்களைச் சேதப்படுத்திய குற்றச் சாட்டில் கைதையுள்ள உதயசிறியை விடுதலை செய்யக் கோரி பிணைமனுத் தாக்கல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top