• Latest News

    March 25, 2015

    உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை ஓராண்டு வரையில் நீடிக்க வேண்டும்!- சுசில் பிரேமஜயந்த

    உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை ஓராண்டு வரையில் நீடிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.
    ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் அரசாங்கத்திடம் இதனைக் கோரியுள்ளார்.
    புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடாத்த தேர்தல் திணைக்களத்திற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
    விகிதாசார மற்றும் தேர்தல் தொகுதி அடிப்படையிலான முறையொன்றே எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பின்பற்றப்பட உள்ளது.
    தற்போதைய விருப்புத் தெரிவு முறைமை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    தொகுதிகள் தொடர்பிலான எல்லை நிர்ணயங்களும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    எல்லை நிர்ணயம் தொடர்பில் வர்த்தமானி ஊடாக அறிவித்து புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
    இம்மாதம் 31ம் திகதியுடன் பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது.
    கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்தியடையும் தறுவாயை அடைந்துள்ளன.
    இந்த அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்ய பதவிக் காலத்தை நீடிக்க வேண்டியது அவசியமானது என சுசில் பிரேமஜயந்த கோரியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை ஓராண்டு வரையில் நீடிக்க வேண்டும்!- சுசில் பிரேமஜயந்த Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top