ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணி
அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செயல்பட்ட கோத்தாபாய
ராஜபக்ஷவின் இனவாத செயல்பாடுகளே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த
ராஜபக்ஷவின் தோல்விக்கு காரணமாக அமைந்தன , மாறாக பசில் ராஜபக்ஷ
காரணமல்ல. இதனை ஆயிரம் முறையும் கூறுவேன் என வீடமைப்பு மற்றும்
சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மீண்டும்
அரசியலில் பிரவேசிக்க முற்படுவாராயின் முன்னைய காலகட்டத்தில்
எமது நாட்டில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட சிலரின் செயற்பாடுகள்
தொடர்பில் தவறவிட்டவைகளை உணர்வது அவசியம் எனவும்
குறிப்பிட்டார்.கொழும்பில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு மற்றும்
சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற
விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வீடமைப்பு மற்றும் சமுர்த்தி
இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தோல்விக்கு முற்று முழுவதுமாக
காரணமானவர் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக் ஷ அல்ல.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவே ஆகும். இவ்வாறான
நிலையில் கடந்த காலங்களில் எமது நாட்டில் பொதுபல சேனா போன்ற சில
பிரிவினவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு முன்னாள் பாதுகாப்பு
செயலாளர் தூண்டுதல் அளிக்கும் முகமாக செயற்பட்டமையினாலேயே சிறுபான்மை
சமூகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மீது நம்பிக்கையை
இழந்தது.
இவ்வாறான ஒரு நிலையே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ
தோல்வியடைய முக்கியமான காரணமாக அமைந்தது. மீண்டும் எமது நாட்டில்
இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள எந்த ஒரு தரப்பினரும்
எண்ணக்கூடாது. எமது நாடானது இன்று மூவின மக்களும் சுதந்திரமாக வாழும்
நாடாக காணப்படுகின்றது. அந்தவகையில் எமது நாட்டில் தொடர்ந் தும் ஜனநாயக
போக்கை கடைப்பிடிப்பது அனைவரினதும் பாரிய பொறுப்பு என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment