• Latest News

    April 06, 2015

    மகிந்த பேரணியில் கலந்து கொள்ளும் ஸ்ரீ.சு.கவினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: சந்திரிக்கா

    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்கள்  பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்
    நேற்று கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
    இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விரைவில் தண்டனை வழங்கவுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்
    அவ்வாறு தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் விருப்பமென்றால் எங்களுடன் கலந்துரையாடி, பின்னர் தொடர்ந்து எங்களுடன் செயற்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
    மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அனைவரும் தவறு செய்தவர்கள் தான், அதில் குறைந்த தவறு செய்தவர்கள் எங்களுடன் இணைந்து செயற்படுகின்றார்கள்.
    அவ்வாறு இணைந்துள்ளவர்கள் அரசியலில் மாற்றம் வேண்டுமென்பதை புரிந்து கொண்டுள்ளார்கள். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மகிந்த பேரணியில் கலந்து கொள்ளும் ஸ்ரீ.சு.கவினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: சந்திரிக்கா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top