• Latest News

    April 23, 2015

    நாடு திரும்பினால் சிறையில் அடைப்பார்கள் என தம்பி கூறினார்: மகிந்த ராஜபக்ச

    நாடு திரும்பினால், தன்னை சிறையில் அடைப்பார்கள் என பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
    மாத்தளையில் இன்று காலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
    அவர் மேலும் தெரிவிக்கையில். பசிலை நேற்று சிறையில் அடைத்தனர். எனது செயலாளர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய, சமூர்த்தி அமைச்சின் செயலாளர் உட்பட முக்கிய அரச அதிகாரிகள் இலஞ்ச ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
    இலங்கைக்கு வந்தால், சிறையில் அடைப்பார்கள் என பசில் என்னிடம் கூறினார். மகிந்த அண்ணா நான் தவறு எதனையும் செய்யவில்லை நான் இலங்கை வருகிறேன் என பசில் கூறினார்.
    பசிலுக்கு தேவையிருந்தால் அமெரிக்காவில் தலைமறைவாகியிருக்கலாம். விகாரையில் சில் துணிகளை வழங்குவதும் தண்டனை வழங்க கூடிய சட்டமாக மாறியுள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாடு திரும்பினால் சிறையில் அடைப்பார்கள் என தம்பி கூறினார்: மகிந்த ராஜபக்ச Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top