எல்லை நிர்ணய முறைப்பாடுகளை ஆராயும் குழு தனது கடமையினை நிறைவு செய்வதற்கு கால அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எல்லை நிர்ணய முறைப்பாடுகளில் 90 வீதமானவை விசாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அவை பட வரைபுக்காக நில அளவைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வர்த்தமானி அறிவித்தலில்
வெளியிடப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையில் தவறுகள் இருப்பின் அது
தொடர்பில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும்படி அரசாங்கம் கோரியது.
இதற்கிணங்க அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 2000 முறைபாடுகளை முன்வைத்தனர். இந்த முறைபாடுகளை ஆராய்ந்து எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்காகவே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி குழுவொன்றினை நியமித்தார்.
இக்குழுவிற்கே தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரைகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment