• Latest News

    November 20, 2017

    ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவின் போலிக் கைெயழுத்துடன் வங்கிக்கு கடிதம் கொடுத்து சலுகை கோரிய தாயும் மகனும் கைது

    - ரெ.கிறிஷ்­ணகாந் -

    னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மக­ளான சத்­து­ரிக்கா சிறி­சேனவின் கையெ­ழுத்தைப் பயன்­ப­டுத்தி ஜனா­தி­பதி செய­ல­கத்தின் கடி­தத் த­லைப்பின் மூலம், காணி­யொன்றை அடகு வைத்து பெற்றுக் கொண்ட கடன் பணத்­துக்­காக சலு­கை­களை பெற்­றுத்­த­ரு­மாறு வங்­கிக்கு போலி கடி­த­மொன்றை உரு­வாக்கி அனுப்­பிய சந்­தேக நபர்கள் இரு­வரை எதிர்­வரும் 29 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கோட்டை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

    போலி ஆவ­ணத்­தினை வங்­கியில் சமர்ப்­பித்த தாயும் அவ­ரது மக­னொ­ரு­வ­ரை­யுமே இவ்­வாறு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் கைது செய்­துள்­ள­தா­கவும், நீதி­மன்ற உத்­த­ரவில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

    இச்­சந்­தேக நபர்­களால் போலி ஆவணம் தயா­ரிக்­கப்­பட்டு அதில் சது­ரிக்­காவின் கையெ­ழுத்­தி­டப்­பட்டு வங்­கிக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­க­ளத்­தினர் தொிவிக்­கின்­றனர்.

    இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ரான மகன் 2015 – 2016 தேர்தல் காலப்­ப­குதி கெடரிங் நிறு­வ­ன­மொன்றை நடத்­தி­வந்­துள்­ள­தாக தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது இந்­நபர் உணவு மற்றும் பாண வகை­களை விநி­யோ­கித்து வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தொிய­வந்­துள்­ளது.

    இவர் கணினி உத­வி­யுடன் குறித்த கடிதத்தலைப்பை பெற்றுக் கொண்டு, அதில் போலியாக கையெழுத்து மற்றும் உத்தியோகபுர்வ முத்திரையிட்டு வங்கிக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தொியவந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியின் மகள் சத்துரிக்காவின் போலிக் கைெயழுத்துடன் வங்கிக்கு கடிதம் கொடுத்து சலுகை கோரிய தாயும் மகனும் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top