• Latest News

    February 13, 2018

    'இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்‌ஷ

    இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்' என்று உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கேட்டுள்ளார்.
    ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
    தேர்தல் முடிவுகளின்படி ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன கட்சி 239 சபைகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் இரண்டாம் இடத்தில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கட்சி 10 சபைகளையும் மாத்திரமே கைப்பற்றியுள்ளன.
    இந்த நிலையில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து விட்டு, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது 2020இல் நடக்கவேண்டிய நாடாளுமன்ற தேர்தல்கள் 2020 ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும் என்று கேட்கிறார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'இலங்கையின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள்''- மஹிந்த ராஜபக்‌ஷ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top