• Latest News

    March 24, 2020

    சுகாதார சேவையாளர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுகின்றது: சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவிப்பு

    (இராஜதுரை ஹஷான்)
    கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மற்றும். வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களின் மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளில்  ஈடுப்படும் சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம், சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும். 

    சுகாதார சேவையாளர்கள் இந்த  வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதற்கான வாய்ப்பு அதிகளவில்  காணப்படுகின்றது. ஆகவே  பொறுப்புள்ள அதிகாரிகள் உரிய  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அகில இலங்கை  சுகாதார சேவைகள்  சங்கத்தின்   செயலாளர்  டெம்பிடியே  சுஹதானந்த தேரர் சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.

      கொரோனா வைரஸ் இலங்கையில் முக்கிய பிரச்சினையாக  காணப்படுகின்றது. வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்கு  சுகாதார சேவையாளர்கள்  கடினமாக முன்னின்று செயற்படுகின்றார்கள். இந.த வைரஸ் சுகாதார சேவையாளர்களுக்கு தொற்றுவதற்கான   வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

    சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு  உரிய  கவனம் செலுத்த வேண்டும். தற்போது  நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ள வேளையில் சுகாதார சேவையாளர்கள் அரச வானகங்களில்  வரவழைக்கப்பட்டு சேவையில் ஈடுப்படுத்தப்படுத்தப்படுகின்றார்கள்.

      போக்குவரத்து  நடவடிக்கைகளின் போது அதிகளவான  பேர் ஒரே  தடவையில் வரவழைக்காமல் தனித்து அல்லது  குறைந்தபட்சமாக   வாகனங்களில் இடவசதிக்கு ஏற்ப  வரவழைக்கப்படுவது   பாதுகாப்பான வழிமுறையாக அமையும்.  சுகாதார சேவையாளர்களின் பாதுகாப்பு   குறித்து அரசாங்கம்  விசேட  கவனம் செலுத்த  வேண்டும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சுகாதார சேவையாளர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுகின்றது: சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top