விசாரணை ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கும், அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும் என, தற்போது, பாரிய நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாரதூரமான ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த பிரேரணையை முன்வைத்து, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இதனை குறிப்பிட்டார்.
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றமிழைத்தவர்கள், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பன குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான செயற்பாடுகள், ஏன் தாமதிக்கப்பட்டு வருகின்றன?.
இந்த ஆணைக்குழுக்களுக்கும், அதன் அறிக்கைகளுக்கும் என, இதுவரையிலும் பொது மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரமும், பணமும் செலவானதே மிச்சம்.
குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க தவறும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் தவறிழைப்பார்கள். எனவே, பொது நிதியை பாதுகாக்க வேண்டியது, நாடாளுமன்றத்தின் தலையாய கடமையாகும்.
ஆணைக்குழுக்கள் தமது அறிக்கையை சமர்ப்பிக்க, பாரிய நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொறுப்பானவர்கள் இதுவரை நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.
February 05, 2019
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment