• Latest News

    February 05, 2019

    தேசிய அரசாங்கத்தை அமைக்க விடமாட்டோம் - எஸ்.பி.திஸாநாயக்க

    அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதென்றும் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க விடமாட்டோம் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். உத்தேச தேசிய அரசாங்க பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
    முஸ்லிம் காங்கிரஸிலுள்ள ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள அலி சாஹிர் மௌலானாவுடன் இணைந்து, தேசிய அரசாங்கத்த அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை மூலம் அமைச்சரவையின் உறுப்பினர்களை 48 ஆக அதிகரித்துக்கொள்ள எதிரிபார்க்கப்படுகின்றது. இந்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இது அரசியல் அமைப்பிற்கு முரணான பண்பாடற்ற ஒரு செயலாகும். அத்துடன், இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியிடம் அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி முன்வைக்கப்படுமிடத்து, ஜனாதிபதி அதனை அங்கிகரிக்கமாட்டார் எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேசிய அரசாங்கத்தை அமைக்க விடமாட்டோம் - எஸ்.பி.திஸாநாயக்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top