ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து பாராளுமன்ற
உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன் போதே எஸ்.பி.திஸாநாயக்க கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment