• Latest News

    January 27, 2020

    ரிசாதோடு இணையும் சூழ்நிலை வரும்: நாமல் எச்சரிக்கை

    எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ரிசாத் பதியுதீனின் கட்சியோடும் கூட்டு சேரும் நிலை உருவாகும் என தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
    19ம் திருத்தச் சட்டத்தின் பின் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதெனின் மூன்றிலிரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மை அவசியப்படுவதாகவும் தெரிவிக்கின்ற அவர் தேர்தலில் போதிய பெரும்பான்மை கிடைக்காவிட்டால் காடழிப்பு குற்றச்சாட்டுள்ளவர்களையும் அரசில் இணைத்துக் கொள்ள நேரிடும் என தெரிவிக்கிறார்.
    அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து நாமல் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரிசாதோடு இணையும் சூழ்நிலை வரும்: நாமல் எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top