யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்து
கொண்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள பாலத்தோப்பூர்
பகுதியைச் சேர்ந்த குடும்பமொன்று, நேற்றைய தினம்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஆராதனையில் மேற்படி
குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளதாக மூதூர் சுகாதார பிரிவினருக்கும்,
மூதூர் பொலிஸாருக்கும் தகவல் கிடைத்ததையடுத்து, அக்குழுவினர் குறித்த
வீட்டுக்குச் சென்று அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களை
14 நாள்களுக்கு வெளியில் செல்லக் கூடாதெனவும், அவர்களுக்கு வீட்டுக்கு
முன்னால் அபாய விளம்பரமொன்று இடப்பட்டுள்ளதாகவும், மூதூர் சுகாதார வைத்திய
அதிகாரி வை.ஜெஸ்மி தெரிவித்தார்.
எனினும், குறித்த குடும்பமானது
தாங்கள் குறித்த ஆராதனையில் கலந்து கொள்ளவில்லையென விசாரணையில்
தெரிவித்ததாகவும் எனினும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவும்,
மூதூர் பொலிஸாரும் அக்குடும்பத்தை 14 நாள்களுக்கு கண்கானிக்கும் எனவும்
அவர் தெரிவித்தார்.
அத்தோடு மூதூர், தோப்பூர், சம்பூர் பகுதிகளைச்
சேர்ந்தவர்கள் அவதானமாகஇருக்குமாறும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி
வை.ஜெஸ்மி மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment