இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்து நிலையில் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
IDH
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான ஒருவரே கொரோனா வைரஸ்
தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் பதிவான 3வது
மரணம் இதுவாகும். உயிரிழந்தவர் கொழும்பு - மருதானையை சேர்ந்தவர் என
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கையில் இது வரையில், 146 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்
18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர்
தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment