• Latest News

    January 12, 2021

    சட்டத்தரணிகளை சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்கும் தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்படவில்லை - கம்மன்பில

    சட்டத்தரணிகளை சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களாக நியமிப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

    150 சட்டத்தரணிகளை பொலிஸ் பரிசோதகர்களாக இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளிவந்திருந்தன என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

    சட்டத்தரணிகளை சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களாக நியமிப்பதற்கான தீர்மானம் அமைச்சரவையினால் மேற்கொள்ளவில்லை.

    நீதியமைச்சும் பொது மக்களுக்ககுமான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும். 

    அமைச்சரவையில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்பதினால் சம்பந்தப்பட அமைச்சர்களே இதுதொடர்பாக தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சட்டத்தரணிகளை சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களாக நியமிக்கும் தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்படவில்லை - கம்மன்பில Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top