• Latest News

    March 03, 2021

    கொவிட்-19 சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதனை மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு அரசாங்கத்திடம் இரணைதீவு மக்கள் கோரிக்கை

    கொவிட்-19 சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை மீள் பரிசீலனை செய்து உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் இரணைதீவு மக்கள் கோரியுள்ளனர்.

    அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி அவர்கள் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

    வடக்கு கிழக்கில் வாழும் மக்களுடன் இணைந்து எமது சக முஸ்லிம் சமூகத்தின் நல்லடக்க உரிமைக்காகவும், கட்டாய தகனத்தை எதிர்த்தும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதாக அந்த மக்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    எமது நாட்டின் கலாசாரத்திற்கு அமையவும், உலகலாவிய மனிதாபிமான விழுமியங்களுக்கு அமையவும் உயிரிழந்தவர்களுக்கான உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    கொவிட்-19 தொற்றால் மரணப்பவர்களின் சடலங்களை இடத்திற்கு இடம் காவிச் செல்வது இறந்தவர்களின் கௌரவத்தையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கௌரவத்தையும் மீறும் செயற்படாகும்.

    எனவே கொவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்யும் மயானமாக இரணைதீவை மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மீளப்பெற வேண்டும்.

    அத்துடன் முஸ்லிம் மக்களினதும் ஏனைய சமூகங்களினதும் நல்லடக்க உரிமைக்கு உரிய கௌரவம் அளித்து அவர்களுக்கு பொறுத்தமான இடங்களில் அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துமாறு இரணைதீவு மக்கள், அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொவிட்-19 சரீரங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதனை மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு அரசாங்கத்திடம் இரணைதீவு மக்கள் கோரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top