ஈஸ்டர்
ஞாயிறு தினத்தில் இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில்
இருப்பது யார் என்பது தமக்குத் தெரியும் என பொது மக்களின் உரிமைகளைப்
பாதுகாக்கும் அறக்கட்டளையின் பணிப்பாளர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் தெரியும். இதற்கான சாட்சியங்கள் என்னிடம் இருக்கின்றன.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக அமைச்சர் விமல் வீரவங்சவையும் நாங்கள் சந்தேகிக்கின்றோம்.
அவர் சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment