• Latest News

    May 24, 2021

    வைத்தியசாலை பெண் ஊழியர் கோவிட் தொற்றால் மரணம்

     கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் சுகாதார பணிக்குழுவின் உதவியாளராக கடமையாற்றி வந்த 52 வயதான பெண்ணொருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த வைத்தியசாலை ஊழியரான இந்த பெண் கண்டி தலவத்துஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கோவிட் நிமோனியாவே அவரது மரணத்திற்கு காரணம் என்பதை சுகாதார துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    காய்ச்சலும் கோவிட் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அந்த பெண் ஊழியருக்கு கடந்த 21 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

    கண்டி மாவட்டத்தில் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழந்தமை இது முதல் முறையாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வைத்தியசாலை பெண் ஊழியர் கோவிட் தொற்றால் மரணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top