நாட்டில் இன்று (07.08.2021) மேலும் 2,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,043 உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், 30,330 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  2,487 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 2,90,794 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை,கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  5,017 ஆக உயர்வடைந்துள்ளது.