• Latest News

    July 16, 2023

    அரகலய ஆர்ப்பாட்டத்தில் சர்வதேச சதித் திட்டங்கள்!

    அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதித் திட்டங்கள் தொடர்பில் மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்தப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

    ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய சர்வதேச சதிகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
     

    சதித் திட்டம் குறித்து மேலும் பல தகவல்களை அம்பலப்படுத்திய பின்னர் சதித் திட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியை கோருவதற்காக நாங்கள் அவரை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

    சதித் திட்டம் குறித்த முதற்கட்ட விபரங்களை அவர் 'ஒன்பது : மறைக்கப்பட்ட கதை' என்ற ஏப்ரல் மாதம் வெளியான நூலில் அவர் வெளியிட்டிருந்தார்.

    எனினும் புதிய தகவல்கள் குறித்து மேலதிக விபரங்களை அவர் வெளியிட மறுத்துள்ளார்.

    ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்காக அந்த விபரங்களை முதலில் ஜனாதிபதியிடம் கையளிக்கவேண்டும்.

    மேலும், தனது பிரசுரத்தில் உள்ள விடயங்கள் ஜனாதிபதிக்கு தெரியும். லண்டனில் அண்மையில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி தான் தெரிவித்துள்ள விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் எங்களிடம் உள்ள ஆதாரங்களை குழப்ப விரும்பவில்லை என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரகலய ஆர்ப்பாட்டத்தில் சர்வதேச சதித் திட்டங்கள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top