• Latest News

    July 26, 2024

    பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு நீதிமன்றமே தீர்வு காணப்பட வேண்டும் - சபாநாயகர்


     தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று (26) விளக்கமளித்துள்ளார்.

    பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டது என தெரிவித்துள்ளார்.

    மேலும்,  நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் இதன்போது கூறியுள்ளார்..

    தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு நீதிமன்றமே தீர்வு காணப்பட வேண்டும் - சபாநாயகர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top