• Latest News

    October 06, 2024

    முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையை தற்போதைய அரசாங்கமும் பின்பற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது - முன்னாள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

     கடந்த எரிபொருள் விலை திருத்தமானது விலைச் சூத்திரத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் பொய்யொன்றை கூறியதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர், விலைச் சூத்திரத்தின் பிரகாரம் உரிய விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனை உறுதிப்படுத்தியதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

    எரிபொருள் விலை  குறையும்

    2022-23ல் இல்லாத வகையில், நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால், போட்டி விலையில் விநியோகஸ்தர்களிடம் இருந்து எரிபொருளை பெறுவது தற்போது சாத்தியமாகியுள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் வரை எரிபொருள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பலன்களின் அடிப்படையில் அடுத்த சில மாதங்களில் எரிபொருளை் விலை  15-20%  வீதம் வரை குறையும் சாத்தியம் இருப்பதாக கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

    எரிபொருளுக்கான அனைத்து வரிகளையும் நீக்கும் யதார்த்தத்தை ஏற்கனவே உணர்ந்து செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையை தற்போதைய அரசாங்கமும் பின்பற்றுவது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையை தற்போதைய அரசாங்கமும் பின்பற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது - முன்னாள் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top