• Latest News

    June 29, 2014

    மைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன் வைபவம்

    அபூ இன்ஷப்;
    சம்மாந்துறையின்  சேர்ந்த அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன்  வைபவமும் விசேட துஆப் பிராத்தனையும் இன்று (29) அஸர் தொழுகையினைத் தொடர்ந்து சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
    அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் எற்பாட்டில் அவ்வமைப்பின் தலைவர் வை.பி.சலீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் சிறப்பு பயான் நிகழ்வை மௌலவி எம்.வை.எம்.மஹ்றூப் மதனி நிகழ்த்தவுள்ளதுடன், அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த நினைவுப் பேருரையினை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷட தமிழ்துறை விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா ஆற்றவுள்ளார்.

    இந்த நிகழ்வில் அன்வர் இஸ்மாயிலின் குடும்ப உறப்பினர்கள், கல்விமான்கள், விரிவுரையாளர்கள் அன்வர் இஸ்மாயிலின் ஆதரவாளர்கள் என பெருந் தொகையினர் கலந்த கொள்ளவுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன் வைபவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top