• Latest News

    January 17, 2014

    அல்-மனார் மத்திய கல்லூரியின் தரம் 1 மாணவர்களை வரவேற்ற நிகழ்வு

    பி.எம்.எம்.எ.காதர்;
    மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் தரம் 1 மாணவர்களை வரவேற்ற நிகழ்வு (16-01-2014) அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் முன்னிலையில் பிரதி அதிபர் முகைதீன் முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான்  கலந்து கொண்டார். அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சி.எம்.தௌபீக், சட்டத்தரணி எம்.ஐ.றைஸூல் ஹாதி, சத்திர சிகிச்சை நிபுணர் சித்தீக் ஜெமீல,;
    ஆகியோருடன் அதிபர் எம்.எம்.ஹிர்பான், பிரதி அதிபர் முகைதீன் முஸம்மில், பிரதி அதிபர் ஏ.எம்.அன்சார்,  பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர் வை.கே. றஹ்மான், ஆசியா மன்றத்தின் நிகழ்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்;. வலீத் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர். இதில்    மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள் பிரதம அதிதி மற்றம் ஏனைய அதிதிகளால் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அல்-மனார் மத்திய கல்லூரியின் தரம் 1 மாணவர்களை வரவேற்ற நிகழ்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top