புதிய ஜனநாயக முன்னணி (NDF) கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை (27) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
03 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சாமர சம்பத் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment