
கிராண்ட்பாஸ் மஸ்ஜித் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து 3
பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்
விசாரணைகளை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு
பொலிசாரே குறித்த மூவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிராண்ட்பாஸ் மஸ்ஜித் மீதான தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே
இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment