ஞாணசார தேரர் பொய்யைப் பரப்பி வருகின்றார்.
அவர் கூறுவது பௌத்த சமயத்தின் போதனைகள் அல்ல. அவரது பொய்களுக்கு எதிராக
இந்த நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூறும் பணியை
ஆரம்பித்துள்ளேன்” எனக் கூறிய மகாவலி மகா விகாரையின் விகாராதிபதி, சங்க
நாயக்கர் வடரெக விஜித்த தேரர், “தான் இதுவரை 40 தேரர்களின் அங்கியைக்
கழற்றியிருப்பதாக ஞாணசார கூறுகின்றார். தேரர்களின் அங்கியைக் கழற்றுவதற்கு
அவர் யார்? அவரைத்தான் அங்கியைக் கழற்றி அமுடை (கச்சை) அணிவித்து விரட்ட
வேண்டும்” புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டபத்தில் இன்று (12-09-2013) பி.ப.
9:00 மணியளவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் கூறினார்.
மேலும், ஞாணசேர தேரர் நோர்வேயினதும்
இஸ்ரவேலினதும் வாயாக மாறி இனவாதத்தைப் பரப்பி வருகின்றார் என்றும்
கூறினார். நன்றியுரையை பெரியபள்ளி நிருவாக சபை செயலாளர் எம்.பி. நௌபல்
தமிழிலும் சிங்களத்தில் ஹிஷாம் ஹுஸைனும் நிகழ்த்தினர்.- தகவல்: puttalamonline.com

0 comments:
Post a Comment