• Latest News

    September 19, 2013

    மாகாண சபைத் தேர்தலுக்கு பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள்!

    எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படவிருக்கின்ற மூன்று மாகாண சபைத்தேர்தலில் மத்திய மாகாண தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படவிருப்பதாக மாத்தளை மாட்ட தெரிவத்தாட்சி அதிகாரி ஹேலன் மீஹஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
    தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் ஆலோசனைக்கு அமையவே பிளாஸ்டிக் வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படவிருக்கின்றது.
    தேர்தலில் பிளாஸ்டிக் வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை நகர சபை அதிகாரத்திற்குட்பட்ட வாக்களிப்பு நிலையங்களிலேயே இந்த வாக்குப்பெட்டி பயன்படுத்தப்படவுள்ளன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாகாண சபைத் தேர்தலுக்கு பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top