ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில்
இருந்து எந்தவொரு நாடும் வெளியேற முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை
தெரிவித்துள்ளது.

இதனை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஜெனீவாவிலும் சென்று அறிவித்துவிட்டு வந்துள்ளது.
இந்த நிலையில்
ஐக்கிய நாடுகளின் ஒழுங்குவிதிகளின் படி நிறைவேற்றப்பட்ட யோசனை ஒன்றில்
இருந்து நாடு ஒன்று வெளியேற முடியாது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான
உயர்ஸ்தானிகரக பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்றப்பட்ட யோசனை ஒன்றில் இணை அனுசரணையாளராக சேர்ந்துக்கொள்வதற்கு நாடுகளுக்கு வாய்ப்பிருப்பதாக கோமிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும்
இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
ஆணையாளர் மிச்செல் பெச்லட்டை தவிர வேறு எந்த உயரதிகாரிகளும் இலங்கையின்
நிலைப்பாடு தொடர்பில் கருத்துக்களையோ முடிவுகளையோ வெளியிடவில்லை.
0 comments:
Post a Comment