• Latest News

    September 06, 2013

    நாடு கடந்த தமிழீழ அரசுடன் பேசுவதற்கு அரசாங்கம் தயார்! கலாநிதி ரொஹான் குணரட்ண

    நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­துடன் கூட பேச்­சு­வார்த்தை நடத்த இலங்கை அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது .யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் திறந்த கொள்­கை­யு­ட­னேயே செயற்­பட்­டது. ஆனால் அவற்றை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­திய சர்­வ­தேச பார்­வையே இலங்கை மீதும் காணப்­ப­டு­கின்­றது.
    இவ்வாறு நேற்று (05.09.2013) நடைபெற்ற சர்­வ­தேச பாது­காப்புச் செய­ல­மர்வின் இறுதி நாள் வைபவத்தில் தேசிய பாது­காப்பு கொள்­கைகள் மற்றும் பயங்­க­ர­வாத ஒழிப்பு தொடர்பான ஆலோ­சகர் கலா­நிதி ரொஹான் குண­ரட்ன தெரி­வித்தார்.

    அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

    யுத்­தத்தின் இறுதிக் காலப்­ப­கு­தியில் பல்­லா­யிரம் தமி­ழர்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்­பது போலி­யான பிர­சா­ர­மாகும். 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தொடக்கம் மே மாதம் யுத்தம் முடி­வ­டையும் வரை வடக்கில் 7 ஆயிரம் பேர் மாத்­தி­ரமே கொல்­லப்­பட்­டனர். இவர்­களில் 5 ஆயிரம் பேர் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் என்­பதே உண்மை.

    புலம்­பெ­யர்ந்து வாழும் புலிகள் இலங்­கைக்குள் மீண்டும் செயற்­பட சந்­தர்ப்பம் தேடு­கின்­றனர். 10 வீத­மான தமி­ழர்கள் சர்­வ­தே­சத்தில் வாழும் புலி­க­ளுடன் தொடர்பு வைத்­துள்­ளனர். ஆகவே இலங்­கைக்கு பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் குறைந்­துள்­ள­தாக கூற முடி­யாது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாடு கடந்த தமிழீழ அரசுடன் பேசுவதற்கு அரசாங்கம் தயார்! கலாநிதி ரொஹான் குணரட்ண Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top