• Latest News

    September 12, 2013

    தனக்கு சொந்தமில்லாத விடயங்களில் தலையீட செய்வதற்கு யாழ். கட்டளைத் தளபதிக்கு உரிமையில்லை; விக்னேஸ்வரன்

    தம்மைப்பற்றியும் ஏனைய அரசியல் வாதிகளைப்பற்றியும் விமர்சிப்பதற்கு யாழ்ப்பாண பாதுகாப்பு கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவிற்கு எவ்வித உரிமையும் கிடையாது என வடமாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொக்குவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    யாழ் பாதுகாப்பு இராணுவ கட்டளைத் தளபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் யாழ்ப்பாணத்தில் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையிடுவது குறித்து மனோகணேசன் முன்வைத்த விமர்சனம் தெரிவித்தமைக்கும், வடக்கிலுள்ள அரசியல் வாதிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாகவும் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தனக்கு சொந்தமில்லாத விடயங்களில் தலையீட செய்வதற்கு யாழ். கட்டளைத் தளபதிக்கு உரிமையில்லை; விக்னேஸ்வரன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top