அதிகரித்துவரும் குற்றங்களை பூண்டோடு அழிப்பதற்கு ஷரீஆச் சட்டத்திற்கு நிகரான சட்டமுறைமையொன்றை நாட்டினுள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிடுகிறார்.கம்புறுப்பிட்டிய மாஸ்முல்ல பிரதேசத்தில் கொலைசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகள் இருவருக்குமாக பணஉதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவ்வாறின்றி குற்றச்செயல்களை ஒழிக்கவியலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு நிகரான சட்டமொன்றும் அதனுடன் தொடர்புற்ற செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment