• Latest News

    December 14, 2013

    சமுர்த்தி வங்கிகளின் சிறு குழுக்கள் மற்றும் மக்கள் கட்டமைப்புக்களுக்கான விழிப்பூட்டல் வேலைத் திட்டம்

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    கல்முனை பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவின் மருதமுனை-நற்பிட்டிமுனை வலய சமுர்த்தி; வங்கி ஏற்பாடு செய்த பெரிய நீலாவணை 1ம்; பிரிவுக்கான 'திவிநெகும'அபிவிருத்தித் திணைக்களம் தாபிப்பதற்கு முன்னரான சமுர்த்தி வங்கிகளின் சிறு குழுக்கள் மற்றும் மக்கள் கட்டமைப்புக்களுக்கான விழிப்பூட்டல் வேலைத் திட்டம் இன்று காலை (14-12-2013) பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய மண்டபத்தில்  நடைபெற்றது. மருதமுனை-நற்பிட்டிமுனை வலய சமுர்த்தி; வங்கி முகாமையாளர் எம்.எம.;முபீன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்பூட்டல் வேலைத்;திட்டத்தில்; பிரதம அதிதியாக கல்முனை பிரதெச செயலாளர் எம்.எம்.நௌபல் கலந்தகொண்டு விஷேட உரiயாற்றினார். மேலும் கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் தலைமைப்பீட சிரேஸ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலிஹ், கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க சிரேஸ்ட திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர்,  ; ஆகியோர் வளவாளர்களாகக்கலந்து கொண்டு  சமுர்த்தி பயனாளிகளுக்கு விளக்க உரை நிகழ்திதினார்கள். பெரிய நீலாவணை 1ம் பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பசிலா மாஹிர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  எம்.எல்.நாஸர், என். எம். நௌசாட், ஏ.கமால், ஆகியோரும்  சமுர்த்தி பயனாளிகளும் கலந்து கொண்டனர்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சமுர்த்தி வங்கிகளின் சிறு குழுக்கள் மற்றும் மக்கள் கட்டமைப்புக்களுக்கான விழிப்பூட்டல் வேலைத் திட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top