• Latest News

    January 31, 2014

    முன்னாள் புலி உறுப்பினர்கள் 35 பேருக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு

    35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முன்னாள் புலி உறுப்பினர்கள் 35 பேருக்கு எதிராக இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    பஸ் குண்டுத் தாக்குதல்கள், முக்கிய நிலைகள் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல முன்னாள் புலி உறுப்பினர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்து வருகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்னாள் புலி உறுப்பினர்கள் 35 பேருக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top