• Latest News

    January 24, 2014

    எகிப்து : குண்டுத் தாக்குதல்களில் 5 பேர் பலி

    எகிப்தில் பொலிஸ் படையை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகத் தென்படும் குண்டுத் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 70 பேர் காயமடைந்துள்ளனர்.

    கெய்ரோவில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு வெளியே நடந்த கார் குண்டுத் தாக்குதலுடன் இந்தத் தாக்குதல்கள் ஆரம்பித்தன. முதல் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 51 பேர் காயமடைந்தனர்.

    அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் ஏனைய இடங்களில் மேலும் இரு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 15 பேர்வரை காயமடைந்தனர். 2011 கிளர்ச்சியின் மூன்றாவது ஆண்டு நிகழ்வை ஒட்டி இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    அல்கைதாவால் கவரப்பட்ட ஒரு தீவிரவாதக் குழுவான அன்சார் பெய்ட் அல்-மக்டிஸ் இதற்கு உருமை கோரியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எகிப்து : குண்டுத் தாக்குதல்களில் 5 பேர் பலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top