• Latest News

    January 24, 2014

    தோணா ஆற்றில் சடலம் கண்டு பிடிப்பு!

    சம்சுதீன் ;
    கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள தோணா ஆற்றில் இன்று இனந் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று தற்போது மிதந்து கொண்டிருக்கின்றது.
    இரத்ததக் காயங்களுடன் காணப்படுகின்ற இந்த சடலமானது இனந் தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
    குறிப்பிட்ட ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதனை
    கண்ட பொது மக்கள் கல்முனை பொலிஸாருக்கு அறிவித்தனையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகை தந்துள்ளார்கள்.
    இச்சடலம் பற்றிய விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை  எடுத்துள்ளார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தோணா ஆற்றில் சடலம் கண்டு பிடிப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top