• Latest News

    January 28, 2014

    அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன

    எஸ்.ஆர்;
    அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்கள் சக்தி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்தும் இப்பேரணி ஐ.தே.கவின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் ரணில், கருஜயசூரிய, ரவிகருணாநாயக்க, ரோசிசேனநாயக்க உட்பட ஐ.தே.கவின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த அரச எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.
    கொழும்பு லிப்படன் சதுக்கத்தில் ஆரம்பமான பேரணி, கொழும்பு ஹைட்பார்க் நோக்கி பேரணி சென்று கொண்டிருக்கின்றது.
    போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காணாமை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை இல்லாதொழிக்க வேண்டும். வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டம் மக்கள் சக்தி என்ற பெயரில் இப்பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top