• Latest News

    January 31, 2014

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சந்திரிகா

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு சில அரசியல் தம்மை கோரியுள்ளன. எனினும் தாம் அதற்கு உடன்படவில்லை என்று முன் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

    கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இந்தக்கருத்தை வெளியிட்டார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமது எண்ணத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க கூறியுள்ளார்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பயமான சூழ்நிலை காரணமாக எவரும் இலங்கை தொடர்பில் பேச முன்வருவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சந்திரிகா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top