• Latest News

    January 26, 2014

    எதிர்காலத்தில் நாட்டில் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக்கப்படுவார்கள்: ஜனாதிபதி

    நாட்டில் சுதந்திரம் மற்றும் அபிவிருத்தி மலர்ந்தது உறுதியான இலக்கு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பினாலேயே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். உறுதியான இலக்கு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை நடைமுறைப்படுத்தினால், அனைத்து சவால்களையும் ஜெயிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    கேகாலை ஷாந்த ஜோசப் பெண்கள் வித்தியாலயத்தில் புதிய நீச்சல் தடாகம் ஒன்றை திறந்து வைத்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
    நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்த விஷேட வேலைத் திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்வதாக இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் நாட்டில் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எதிர்காலத்தில் நாட்டில் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக்கப்படுவார்கள்: ஜனாதிபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top