• Latest News

    January 16, 2014

    ரவூப் ஹக்கீம் புதிய நாட­க­மொன்றை அரங்கேற்றவிருக்கிறார்.

    மாகா­ண­சபை தேர்தல் நடை­பெ­ற­வுள்ள இத்­த­ரு­ணத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய நாட­க­மொன்றை அரங்கேற்றவிருக்கிறார். இந்நாடகத்தினால் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது  என்று மத்­திய மாகா­ண­சபை உறுப்­பி­னரும், தேசிய ஐக்­கிய முன்­னணி தலை­வ­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்தார்.
    இதே­வேளை சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை செய்­யப்­பட்­டமை மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தாக்­கப்­ப­டு­வது தொடர்பில் இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு முன்­னி­றுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    அதி­கா­ரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று இடம்­பெற்ற போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
    தற்­போது மேல் மாகாண சபை கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஹிரு­ணி­காவை மத்­திய கொழும்பின் அமைப்­பா­ள­ராக அர­சாங்கம் நிய­மித்­துள்­ளது. இது மிகவும் வியப்­பான நிகழ்­வாகும்.
    பாரத லக்ஷ்மன் பிரே­மச்­சந்­திர உயிர்­நீத்த பின்பு ஹிரு­ணிகா பேசிய ஒவ்­வொரு வார்த்­தையும் வீணா­கி­விட்­டது. ஹிரு­ணி­காவின் வார்த்­தை­களில் நம்­பிக்கை கொண்ட மக்கள் ஏமாற்றம் கண்­டுள்­ளனர்.
    இதே­வேளை, ஹிரு­ணி­காவை தொகுதி அமைப்­பா­ள­ராக நிய­மித்­த­வுடன் பிர­தி­ய­மைச்சர் பைசர் முஸ்­தபா ஏமாற்­றப்­பட்டார். அவர் அர­சாங்க கடைக்கு போனதில் எவ்­வித பிர­யோ­ச­னமும் இல்லை. அரசை பாது­காப்­ப­தற்­காக அனைத்து துறை­க­ளிலும் உத­வி­பு­ரிந்தார். இருப்­பினும் தனக்கு உதவி புரிந்­தோரை ஓரங்கட்­டு­வதே ராஜபக்ச குடும்­பத்தின் இயல்­பாக உள்­ளது.
    இதே­வேளை தற்­போது இலங்­கையில் போதைப்­பொருள் கடத்தல் அதி­க­மா­கி­விட்­டது. அர­சாங்கம் நினைத்தால் இதனை தடுத்து நிறுத்த முடியும். ஐனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிற்கு தெரியும் போதைப்­பொருள் கடத்தல் உரி­மை­யாளர் யார் என்­பது. அர­சாங்கம் இவர்­க­ளு­டைய புகைப்­ப­டங்­களை பத்­தி­ரி­கை­களில் வெளி­யிட்டு மக்­க­ளுக்கு அறி­வு­றுத்த முடியும். ஆனால் அரசு அவ்­வாறு செயற்­பட்டால் அமைச்­சர்­களின் உண்­மைகள் வீதிக்கு வந்­து­விடும்.
    இந்­நி­லையில் அர­சாங்கம் பல கோடிக்­க­ணக்கில் அபி­வி­ருத்­திக்­காக நிதி ஒதுக்­கீடு செய்த போதிலும் அவை­ய­னைத்தும் வீண­டிக்­கப்­ப­டு­கி­றது. அம்­பாந்­தோட்டை மத்­தள விமான நிலையம் நிர்­மா­ணிக்­கப்­பட்ட போதும் குறித்த விமான நிலை­யத்தில் பற­வை­களின் இடை­யூறின் கார­ண­மாக விமா­னங்கள் தரை­யி­றங்க முடி­யா­துள்­ளது.
    அத்­துடன் இவ்­வ­ரசு மூன்று குடும்­பங்­களை அட­கு­வைத்து கடன்­பெற்று வரு­கி­றது. மக்­களை ஏமாற்றி வீதி­க­ளுக்கு காபெட் இடுவதே இவ்­வ­ரசின் அபி­வி­ருத்­தி­யாக உள்­ளது. வீதி­களை செப்­ப­னி­டு­வது என்ற பெயரில் மக்­க­ளு­டைய பணத்தை கொள்­ளை­யி­டு­கின்­றனர்.
    தற்­போது ரத்­து­பஸ்­வல மக்­க­ளுக்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக நீரை வழங்க வேண்டும். அத்­துடன் ஒரு தொழிற்­சங்­க­வா­தி­யாக, மீன்­பி­டித்­துறை அமைச்­ச­ராக செயற்­பட்ட மஹிந்த ராஜபக்ச, அது­மாத்­தி­ர­மன்றி முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸ­விற்கு எதி­ராக ஐ.நா.விற்கு சென்று முறை­யிட்ட மஹிந்த ராஜபக்ச மக்­க­ளுக்கு தண்ணீர் துளி­யேனும் வழங்க மறுக்­கிறார்.
    அத்­துடன் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை செய்­தவர் யாரென தனக்கு தெரி­யு­மென மஹிந்த ராஜபக்ச கூறி­யி­ருந்தார். இந்­நி­லையில் அவ்­வாறு தெரிந்­தி­ருப்பின் ஏன் குறித்த குற்­ற­வா­ளியை கைது செய்­ய­வில்லை.
    இலங்­கையில் எல்லை மீறி ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர். எனவே ஊடகவியலாளர் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்பு நிறுத்த வேண்டும்.
    அத்தோடு மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய நாடகமொன்றை அரங்கேற்றவிருக்கிறார். இந்நாடகத்தினால் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ரவூப் ஹக்கீம் புதிய நாட­க­மொன்றை அரங்கேற்றவிருக்கிறார். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top