கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
11 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கொட்டாவ-கடுவெல
அதிவேக நெடுசாலை ஜனாதிபதியின் ஆலோசனையுடன் நெடுஞ்சாலைகள் அமைச்சினால்
உள்நாட்டு பொறியியலாளர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கொட்டாவ – கடுவெல அதிவேக நெடுஞ்சாலையில் அமைந்து 3.3 கிலோமீட்டர்
நீளமுடைய மகாவெள பாலம் இலங்கையின் மிகப்பெரிய பாலம் மற்றும் மேம்பாலமாக
அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்திலிருந்து நாளொன்றுக்கு மில்லியன் கணக்கானோர் கொழும்பு நகருக்கு பயணிக்கின்றனர்.
இதனால் தினந்தோறும் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இதனைக்
குறைக்கும் முகமாக இப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு
தெரிவித்துள்ளது.









0 comments:
Post a Comment