• Latest News

    March 16, 2014

    கல்முனைப்பிரதேச வீதிகள் அங்குரார்ப்பண ஆலோசனைக்கூட்டம்

     எஸ்.அஷ்ரப்கான் ;
    கல்முனைப்பிரதேச வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (16) ஞாயிற்றுக்கிமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லுரியில் இடம்பெற்றது.

    கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் நெறிப்படுத்தியிருந்தார்.
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின்  நிதி ஒதுக்கீட்டில் கல்முனை ஸாஹிறா கல்லுரி வீதி, கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளி வீதி, கல்முனை கடற்கரைப்பள்ளி வீதி, கடற்கரை வீதிகள் சிறந்த முறையில் நிர்மாணம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக எதிர்வரும் (26) ஆம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளது.

    இந்த வீதித்திறப்பு விழாவிற்கு  பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் பிரதம் அதிதியாக கலந்து கொண்டு மக்கள் பாவகைகாக திறந்து வைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனைப்பிரதேச வீதிகள் அங்குரார்ப்பண ஆலோசனைக்கூட்டம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top